search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் மாணவர்கள்"

    • நீட் தேர்வு எழுதுவதற்காக மையங்களில் மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
    • இன்று மதியம் தேர்வு தொடங்கியது.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படு கின்றன.

    இந்த ஆண்டிற்கான நீட் தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுதுகிறார் கள். இந்த வருடம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 497 நகரங்களில் தேர்வை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது.

    தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிமிடத்திற்கு முன்னதாக மாணவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

    நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். தேர்வு எழுதச் செல்லும் மாணவ-மாணவி கள் பல்வேறு கட்டுப்பாடு களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டு இருந்தது.

    தமிழ்நாட்டில் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, உள்பட 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 59 மையங்களில் தேர்வு நடக்கிறது.

    நீட் தேர்வு எழுதுவதற்காக மையங்களில் மாணவ-மாணவிகள் குவிந்தனர். காலையிலேயே பெற்றோரு டன் மாணவர்கள் மையங் களின் நுழைவு வாயிலில் காத்திருந்தனர். பின்னர் காலை 11.40 மணி முதல் தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப் பட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 3 ஆயிரத்து 900 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

    திருப்பூர் மண்டலத்துக்குட்பட்ட கே.எம்.சி., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, விஜயமங்கலம் சசூரி என்ஜினீயரிங் கல்லூரி, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி, கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 5 மையங்களும், கோவை மண்டல கட்டுப்பாட்டின்கீழ், கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும் என 6 மையங்களில் இன்று மதியம் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வை எழுதினர்.

    • மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர்.
    • நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் என் குப்பை, எனது பொறுப்பு, என் நகரம் -எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

    அலகு -2 மாணவர்கள் ஒருக்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான உழவர் சந்தை சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்கை விடு... துணிப் பையை எடு... மரம் வளர்ப்போம் போன்ற ஓவியத்தை வரைந்தனர். மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர். கண்கவர் விழிப்புணர்வு ஓவியம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • ஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருப்பூர்:

    தேசிய அளவிலான ஹீரோ கப் சிலம்பப் போட்டிகள் கோவாவில் ஜூன் 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழகம் சார்பில் 27 மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள். விஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.

    8வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அவிநாசியைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகளும் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ரெயில் மூலம் திருப்பூர் வந்தனர்.

    அவர்களுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தொடர் பயிற்சி அளித்த சிலம்பாட்ட ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன் மற்றும் தேவ அரசு என்ற 3 பயிற்சியாளர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தனர். 15 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சிலம்பாட்ட போட்டியில் 27 தங்கப்பதக்கங்களை தமிழக மாணவர்கள் பெற்றது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    ×